பார்வையாளர்களை டீலில் விட்ட மாவட்ட நிர்வாகம்!

கு.அசோக்,
தமிழ்நாடு அரசு அரசு பள்ளி மாணவர்களின் தனித் திறனை ஊகிக்கும் வகையில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் கலைத் திருவிழா 2024-2024 ஆம் ஆண்டிற்கான போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் அரசு பள்ளிகள் 72 பள்ளிகளில் இருந்து 1542 மாணவர்கள் கலந்து கொண்ட கலைத்திருவிழாவை கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி துவங்கி வைத்தா ர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலிருக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் நாடகத் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
இதனைக்காண பொதுமக்களும், பெற்றோர்களும் வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு போதிய வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று பலரும் புலம்பினர்.