ஆட்சியர் அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்ட பழங்குடிமக்கள்!

ஆட்சியர் அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்ட பழங்குடிமக்கள்!

ஜி.கே.சேகரன்,

வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மார்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் பொதுமக்களுடன் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

¢ கணியம்பாடி, வேப்பம்பட்டு,அனைக்கட்டு,செதுவாலை,பொய்கை ஆகிய கிராமங்களில் 100 குடும்பங்களுக்கு மேல் பழங்குடியின வகுப்பை சேர்ந்த இருளர் இன மக்கள் வசிக்கின்றனர்.

 இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கோரி கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

  இதனால் தங்களுக்கு வீட்டுமனை கோரி ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சரோஜா தலைமையில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பின்னர் போலிசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சணைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

  ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.