காலை சிற்றுண்டி திட்டத்தை நகராட்சி ஆணையர் ஆய்வு!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் மற்றும் சுவையை குறித்து சோதனை நடத்தப்பட்ட்டது.
இதனை நகராட்சி ஆணையர் ஹேமலதா நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உணவு சுவையும், உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா , குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம் ,நகராட்சி சுகாதார ஆய்வாளர் தேவி பாலா ,நகராட்சி கவுன்சிலர்கள் மோகனா சண்முகம், லோகேஸ்வரி சரத்பாபு, மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.