நடுரோட்டில் தாக்கப்பட்ட மாணவி! ஆசிரியர் கைது!

நடுரோட்டில் தாக்கப்பட்ட மாணவி! ஆசிரியர் கைது!

 ஆர்.ரமேஷ்,

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் - பாகலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியின்போது, உடற்கல்வி ஆசிரியர் சாட்டிய பொய் குற்றச்சாட்டின் பேரில் மாணவி ஒருவர் நடுரோட்டில் தாக்கப்பட்டார்.

   கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி ஒசூரில் நடந்தது, அதில் ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

  இந்த போட்டியை நடத்திய தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

  அதை ஒரு பள்ளி மாணவி எடுத்ததாகக் சந்தேகப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன் அந்த மாணவியை திட்டித் தீர்த்துள்ளார்.

 இதனால் அந்த மாணவி தரப்பில்  புதிய கடிகாரத்தை வாங்கிக்கொடுத்தும் சமாதானம் அடையவில்லையாம் அந்த ஆசிரியர்.

இதில் நடு ரோட்டில் பலர் முன்னிலையில் மாணவியை கடுமையாக தாக்கியும் உள்ளார்.

  இந்த தகவல் போலீசாரின் பார்வைக்கு சென்றதும் உடற்பயிற்சி ஆசிரியர் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்தனர்.