டி.சி.லேன்டை முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர்! தடாலடியாக மாற்றம்! போலீசில் புகார் அளிக்க முடிவு!

டி.சி.லேன்டை முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர்! தடாலடியாக மாற்றம்! போலீசில் புகார் அளிக்க முடிவு!

 எஸ்.விஜய்,

 வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் பொறுப்பில் இருந்தவர் கவிதா. கருணை அடிப்படையில் பணிக்கு சேர்ந்த இவர்¢ சென்னை பத்திரப்பதிவுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் உதவியாளராகவும், சார் பதிவாளர் (பொறுப்பு) பணியில் பணியாற்றியுள்ளார்.

 இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 அந்த வகையில் வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு (பொறுப்பு) சார் பதிவாளராக வந்து சேர்ந்த நான்காவது நாளிலே காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட குடியாத்தம் மெயின் ரோட்டில் அருகாமையில் உள்ள இதமான சர்வே எண்: 390/3 சுந்தரி அம்மன் கோவில் நிலமான இடத்தை மெய்த்தன்மை சான்றுகள், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தின் ஆவணங்களை பார்வையிடாமலும், கோவில் இடத்தை வேறு பெயருக்கு பத்திர பதிவு செய்துள்ளார்.

 இது சம்பந்தமாக முனுசாமி த/பெ ரங்கநாதன் என்பவர் காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பில் இருந்த கவிதா என்பவரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இந்த முறைகேடான பத்திரப்பதிவு சம்பந்தமாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், காட்பாடி  வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார்.        மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட ஏரந்தாங்கல் கிராமத்தில் சரஸ்வதி என்கிற பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுயுள்ள 8 சென்ட் டிசி நிலத்தை, (சர்வே எண் 335/1பி3.) காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பு கவித¢ பத்திரப்பதிவு செய்துள்ளார்.

 அதன்  பதிவு எண் : 11677/2023. ஆகும்.

 இது சம்பந்தமாக பதிவுத்துறை வேலூர் மாவட்ட துணைத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கவிதாவை தடாலடியாக பணியிட மாற்றம் செய்துள்ளது நிர்வாகம்.

  இந்நிலையில் கவிதா மீது காவல் துறையில் சீட்டிங் புகார் அளிக்க பட்டியலின அமைப்பு ஒன்று தயாராகி வருகிறதாம்.