பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேர வேண்டும்!

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேர வேண்டும்!

 ஜி.சாந்தகுமார்,

  முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  சட்டப்பேரவையில் இருக்கை மாற்றப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் இருக்கையை அவர்களாகவே கொடுத்தார்கள். தற்போது அவர்களாகவே எடுத்துக் கொண்டார்கள் என்று பதில் அளித்தார்.

  பாஜகவை முழுமையாக ஆதரிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை தந்துள்ளது என்றும் கூறிய அவர் உறுதியாக பாஜகவை ஆதரிக்கிறோம் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார். மேலும் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக வெற்றி பெறும் என்றும் கூறிய ஓபிஎஸ், .டி.வி.தினகரன், சசிகலா எங்களுடன் இணைய வேண்டும் என விரும்புவதாகவும் சொன்னார்.