டிராக்டரில் சிக்கிய சிறுவன்! தந்தை கண் முன்னே பலி!

டிராக்டரில் சிக்கிய சிறுவன்! தந்தை கண் முன்னே பலி!

 ஜி.கே.சேகரன்,

விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது தந்தையின் கண் முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழந்தான்.

 வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த குக்கலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன், கவிதா தம்பதியினா.¢ இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் பரத்ராஜ் 8 வயது குக்கலபள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

  நேற்று விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் குக்கலபள்ளி கொள்ளை மேடு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேர்க்கடலை விளைவிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை அழைத்துள்ளார்.

அவரும் அவருடைய டிராக்டரை கொண்டு வந்து நிலத்தில் உழுவதற்காக நிறுத்தி வைத்திருந்தபோது, சிறுவன் பரத்ராஜ் டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் மீது ஏறி நின்று உள்ளார்.

அப்போது ஆதி கேசவன் டிராக்டரை நிலத்தில் உழுவதற்காக எடுத்தபோது நிலை தடுமாறி பாரத் ராஜ் கீழே விழுந்து விட்டான்.

  அப்போது டிராக்டர் ரோலரில் சிறுவன் சிக்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பரத் ராஜா மீட்க முயற்சித்த உள்ளனர் ஆனால் பாரத் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

 சம்பவம் குறித்து லத்தேரி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு வழக்கு பதிந்தனர்.

தந்தையின் கண் முன்னே மகன் டிராக்டரின் ரோலரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.