தபால் நிலையத்தை மாற்றும் முயற்சி பொதுமக்களின் போராட்டத்தால் கைவிடப்பட்டது!

.கே.சேகரன்,
வாணியம்பாடியில் தாபல் நிலையத்தை முன்னறிவிப்பின்றி அகற்றப்படுவதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, புதூர் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தபால் நிலையத்தை எந்த ஒரு முன்னறிவிப்பின்றி அகற்றுகின்றனர்.
அதன் அடிப்படையில், அதிகாரிகள் தபால் அலுவலகத்தில் உள்ள பொருட்களை காலி செய்ய முயன்றால் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில்,இப்பகுதியில் உள்ள முதியவர்கள் பெண்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளியை சேர்ந்த மாணவர்கள் என பலர் தபால் நிலையம் மூலம் சேமிப்பு கணக்கு, மின் கட்டணம் செலுத்துவது, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பலன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென எந்த ஒரு முன்னறிவிப்பின்றி இந்த தபால் நிலையம் புதூர் பகுதியில் இருந்து அகற்றப்பட்டு நியூடவுன் பகுதியில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தின் உடன் இணைக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்ததால்அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
3 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தபால் நிலையத்திற்கு முதியவர்கள் எவ்வாறு செல்ல முடியும் எனக்கூறி அப்பகுதி மக்கள் தபால் நிலையம் அகற்றப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த நகர காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தபால் நிலையம் அகற்றப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.