பள்ளி கட்டிடம் வேண்டி போராடிய மாணவ சிறார்கள்! விரட்டியடிக்க முயன்ற போலீசார்! டென்ஷனோ டென்ஷன்!

 ஜி.கே.சேகரன்,  

 ஆம்பூர் அருகே பள்ளி வகுப்பறை கட்டித்தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோர்களுடன் சாலை மறியல், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.. வலுக்கட்டாயமாக மாணவர்களை அப்புறப்படுத்தியத்தியால், காவல்துறையினருடன் மாணவர்களின் பெற்றோர்கள் வாக்குவாதம்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இராமசந்திராபுரம் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயில்கின்றனர்.

 இந்த துவக்கப்பள்ளியில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது.

 அதற்கு ஏதுவாக ஏற்கனவே பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்துள்ளனர். இப்படி பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரையில் புதிய கட்டிடம் கட்டிதராததால் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் திறந்த வெளியில் அமர்ந்து கல்வி பயில்கின்றனர்.

  மேலும் மழைகாலங்களில் சேறும் சகதியில் மாணவர்கள் அமர்வதாகவும், இதனால் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வருவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை அளித்தும், இதுவரையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலர் வருத்தப்பட்டனர்.

 இந்த சூழலில் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை கல்ய்ந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

  அதற்கு மாணவர்கள் மறுத்ததால், அவர்களை போலீசார் வலுகட்டயாமாக அப்புறப்படுத்தினர்.

  இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த,  மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன்  மாணவர்களின் பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு   இதுகுறித்து உரிய ஏற்பாடுகள் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் போராட்டத்தை கைவிட்டு மாணவர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்துச்சென்றனர்.

  இதனால் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..அதனை தொடர்ந்து  பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் மணிவாசகம் மற்றும் உதவி வட்டார கல்வி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

 அவர்களுக்கென்ன வந்தது மாதம் பிறந்தால் சம்பலமும், திட்டத்துக்கு ஏற்ப கிம்பளமும் கிடைத்தால் போதும், அவுங்க வீட்டு பிள்ளைகளா இங்கு படிக்கிறார்கள்? சொல்லுங்க பார்க்கலாம்!?