ஒயர்மேன் தொடங்கி சி.இ. வரை லஞ்சம்! புறம்போக்கு இடத்துக்கு மின் இணைப்பு கொடுக்குறாங்க!

 ஒயர்மேன் தொடங்கி சி.இ. வரை லஞ்சம்! புறம்போக்கு இடத்துக்கு மின் இணைப்பு கொடுக்குறாங்க!

 பா.சுரேஷ்,

  தமிழக அரசால் மின் கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண டெபாசிட் தொகை உயர்வை கண்டித்து ஒயர்மேன் தொடங்கி சி.இ. வரை லஞ்சம் வாங்குவதை கண்டித்தும் யுடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் மின்கட்டண உயர்வு மற்றும் மின்கட்டண டெபாசிட் தொகை உயர்வை கண்டித்து ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் (யுடியுசி) மற்றும் காஞ்சி மாவட்ட ஜீவா பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ்  (யுடியுசி) யின் மாநில தலைவர் இ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.மாசிலாமணி, ஜெகன், ஜீவானந்தம், யோகிஸ்வரன் மற்றும் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் சிறப்பு அழைப்பாளராக யுடியுசி யின் மத்திய குழு உறுப்பினரும், மாநில செயலாளருமான பி.வெற்றிக்குமார் மின்சார துறையில் நடைபெறும் ஊழலை பற்றி எடுத்துரைத்தார்.

 இதனை தொடர்ந்து மாநில தலைவர் இ.கோவிந்தராஜன் பேசுகையில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், படப்பை, கேளம்பாக்கம் மற்றும் மறைமலைநகர் உள்ளிட்ட மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வயர்மேன் தொடங்கி போர்மேன்,ஜே.இ, ஏ.இ, டி.இ, எஸ்.இ மற்றும் சி.இ வரையிலான அதிகாரிகள் தான் பெருகின்ற லட்சக்கணக்கான லஞ்சம் பணத்தை பற்றிய பட்டியலை வெளியிட்டார்.

 அதுமட்டுமல்லாமல் பலநூறு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருக்கும் மக்களிடம் இ.பி.கனெக்ஷன் கொடுப்பதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரிகள் நிலம் மற்றும் சொகுசு விடுகளை வாங்கி குவிப்பதாக சில பத்திரிக்கை மற்றும் ஊடகங்களிலும் படத்துடன் கூடிய செய்தியாக வெளிவருவது பொதுமக்களுக்கான காட்சி பொருளாகவே இருப்பதை சுட்டிக்காட்டினார்.

   விஜிலன்ஸ் (லஞ்ச ஒழிப்பு துறை) அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என கேள்வினை முன்வைத்தார்.

 மேலும் லஞ்சத்திற்கு ஆணிவேரான மின்வாரிய துறையின் ஒயர்மேன் தொடங்கி சி.இ. வரையிலான அதிகாரிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களை கண்காணித்து அவர்கள் லஞ்ச பணத்தில் குவித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதோடு அதிகாரிகளை பணி நீக்கம் செய்து சட்டத்தின் அடிப்படையில் செய்த தண்டனைக்கு சிறையில் அடைக்க,சிறப்பு சட்டம் அமல்படுத்தி அதற்கான உத்தரவினை பிறப்பிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டுமென யுடியுசி யின் மாநில தலைவர் இ.கோவிந்தராஜன் தன் கோரிக்கையை முன்வைத்தார்.

   இத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை வலு சேர்க்கும் வகையில், தோழர்.செபஸ்டியன், ராமதாஸ், வக்கீல் பூர்ணிமா மற்றும் நுற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.