காதலை காட்டிக் கொடுத்த எஸ்.எஸ்.எஸ். கல்லூரி மாணவி! மாடியிலிருந்து குதித்தார்!

காதலை காட்டிக் கொடுத்த எஸ்.எஸ்.எஸ். கல்லூரி மாணவி! மாடியிலிருந்து குதித்தார்!

 கு.அசோக்,

 சக மாணவியின் காதல் விவகாரத்தை அவரது அண்ணனிடம் போட்டுக் கொடுத்த ஆத்திரத்தில் மாணவியின் காதலன் மற்றும் ஒரு வாலிபர் சேர்ந்து கல்லூரி மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இதில் மனமுடைந்த  மாணவி கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இந்த  சம்பவம் குறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

  இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மோசூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் சக்தி.  இவர் ஆற்காட்டில் உள்ள எஸ் .எஸ் .எஸ் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

 அவருடன் படிக்கும் மாணவி ஒரு வாலிபரை காதலித்து வருகிறார்.

 இந்த காதல் விவகாரத்தை மாணவியின் அண்ணனிடம் மாணவி சக்தி காட்டிக் கொடுத்தார்.

    இதனால் மாணவியின் காதலன் மற்றும் இன்னொரு வாலிபர் சேர்ந்து சக்தியை ஆபாசமாக பேசி உள்ளனர்.  இதில் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி சக்தி கல்லூரி துறை தலைவரிடம் தெரிவித்துள்ளார். அவர் எதையும் கண்டு கொள்ளாத நிலையில் தான் படிக்கும் கல்லூரியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

  மாடியில் இருந்து குதித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது கல்லூரியில் இருந்தவர்கள் மாணவி சக்தியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

   இதுகுறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.