அல்வா கிண்டும் படத்தை காட்டி அவையில் பேசிய ராகுல்காந்தி!

நரேஷ்.என்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவை என இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முன் அல்வா தயாரித்த புகைப்படத்தை காட்டி எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பேசினார்.
அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட அம்பானி அதானி பெயர்கள்
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகிய 6 பேர் சேர்ந்து இதை அமைத்துள்ளனர். இந்த சக்கர வியூகத்தில் இந்திய இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், குறு, சிறு தொழில் முனைவோர் சிக்கி யுள்ளனர். இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அம்பானி அதானி பெயர்களை ராகுல் காந்தி குறிப்பிட்ட போது குறுக்கிட்ட சபாநாயகர் ௐபிர்லா அவர்களை பெயரை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். அதே போல் ராகுலின் அம்பானி அதானி பேச்சுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
பின்னர் ராகுல் தொடர்கையில், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரினர். ஆனால் மத்திய அரசு, விவசாயிகளின் நலனுக்கு எதிராக 3 புதிய சட்டங்களை இயற்றியது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள், டெல்லி எல்லை பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பிரதமர் மோடியை அவர்கள் சந்திக்க விரும்பினர். ஆனால், பிரதமர் மோடி அவர்களை சந்திக்க விரும்பவில்லை.
இந்தியாவில் ஏ1, ஏ2 தொழிலதிபர்கள் (அம்பானி, அதானி) மட்டுமே கோலோச்சுகின்றனர். விமான நிலையங்கள், தொலை தொடர்பு, ரயில்வே என அனைத்து திட்டங்கள், ஒப்பந்தங்களும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.
நாட்டின் செல்வத்தில் பெரும் பகுதி அவர்களிடம் இருக்கிறது. அவையில் இல்லாதவர்களின் பெயர்களை குறிப்பிடக்கூடாது என்று அவைத் தலைவர் அறிவுறுத்தி உள்ளார். எனவே, அவர்களை ஏ1, ஏ2 என்று குறிப்பிடுகிறேன்.
அல்வா கிண்டும் போது சிறுபாண்மையர் இல்லையே?
மூத்த அதிகாரிகள் சுமார் 20 பேர் சேர்ந்து மத்திய பட்ஜெட்டை தயார் செய்துள்ளனர். இதில் 2 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கூட பட்ஜெட் அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் இடம்பெற வில்லை. அதற்கான புகைப் படத்தை அவையில் ஆதாரமாக காட்டுகிறேன் என்று நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டும் படத்தை எடுத்து அவையில் காட்டினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் இப்படி போஸ்டரை காட்டி பேசக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.அப்போது கேமிரா உடனடியாக வேறு திசைக்கு திருப்பப்பட்டது.
மேலும் ராகுல் தொடர்கையில், நாட்டின் மக்கள்தொகையில் பட்டியலினத்தினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களை பாஜக அரசு அவமரியாதை செய்து உள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்புமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். நாட்டு மக்கள் அனைவரும், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பினர். செல்போனில் ஒளியை ஒளிரச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதையும் நடுத்தர வர்க்க மக்கள் செய்தனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்தி விட்டது.
பட்ஜெட்டில் எங்கள் பங்கு எங்கே என்று 95 சதவீத மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களது கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். இதனாலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அஞ்சுகிறது.
எதிர்த்த ராஜ் நாத்சிங்
முப்படைகளிலும் அக்னி பாதை திட்டத்தில் வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர். நாட்டுக்காக அவர்கள் உயிர்த் தியாகம் செய்யும்போது, அரசு தரப்பில் எந்த இழப்பீடும் வழங்கப்படுவது இல்லை. காப்பீடு தொகை மட்டுமே வழங்கப்படுகிறது என ராகுல் பேசினார்.
அவரது கருத்துக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். ''நாட்டின் பாதுகாப்பு மற்றும் அக்னி பாதை திட்டம் குறித்து தவறான தகவல்களை ராகுல் காந்தி கூறுகிறார். நாட்டின் எல்லைகளை பாதுகாத்து வரும் வீரர்களின் மனஉறுதியை குலைக்கும் வகையில் பேசுகிறார். இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்" என்றார்.