என்னை எந்த நாயும் கூட்டணிக்கு அழைக்கவில்லை! ஆந்திர அணையை வெடி போட்டு தகர்ப்பேன்! மன்சூர் அலிகான் பேட்டி!

என்னை எந்த நாயும் கூட்டணிக்கு அழைக்கவில்லை! ஆந்திர அணையை வெடி போட்டு தகர்ப்பேன்! மன்சூர் அலிகான் பேட்டி!

Click;- https://youtu.be/oE0XSoCa8-c

உ.சசிகுமார்,

வில்லன் நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் அவரது கட்சி சார்பாக 5 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறார் எனவும், வேலூர் தொகுதியில் அவரே போட்டியிடப்போவதாகவும், என்னை எந்த நாயும் கூட்டணிக்கு அழைக்கவில்லை, ஆந்திர அணையை வெடி போட்டு தகர்ப்பேன் தெரிவித்துள்ளார்.

 நடிகர் மன்சூர் அலிகான் ஏற்கனவே 'தமிழ் தேசிய புலிகள்' என்ற பெயரில் கட்சி தொடங்கி நடத்தி வந்தார். கடந்த கால தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். தற்போது அந்த கட்சியின் பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு தினமன்று வெளியிட்டார்.

 இந்நிலையில் இன்று மார்ச் -8 ஆம் தேதியன்று மன்சூர் அலிகான் வேலூர் வந்தார். அவரை தமிழ்நாடு சுன்னத்ஜமாத் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, அதே போல் இஸ்லாமிய அமைப்பினர் பலர் வரவேற்றனர்.

 மக்கான் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திய மன்சூர் அலிகான், பின்னர் வேலூர் நகரை ஒரு ரவுண்டு வந்து, கோட்டையின் உட்புறம் உள்ள மசூதிக்கு சென்றார். அங்கு தொல்பொருள் ஆய்வு துறை வைத்துள்ள குறிப்புகளை வாசித்தார்.  

 அதன் பின்னர் அவர் கூறுகையில், இந்த கோட்டைக்குள் தேவாலயம், இந்து கோவில் எல்லாம் உள்ளது, அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது மகிழ்ச்சி தான். அதே போல் இங்குள்ள மசூதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும். நவாப் காலத்தில் கட்டப்பட்ட மசூதி இது.

 மதுவை ஒழிக்க வேண்டும். மதுவை அரசு விற்பதால் பொட்டலத்தை இவுங்க விக்கிறாங்க. பச்சபிள்ளைகளை குடிக்கவைக்கிறாங்க. மதுவை தடுங்க. செய்யனும்னு நினைச்சா செய்யலாம். போதை பொருளை விக்கிறவனை முதல்ல தூக்கி உள்ளே போடனும்.

  எங்க கட்சி சார்பாக தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். நான் வேலூர் தொகுதியில் போட்டியிருகிறேன். இங்கேயே வீடு எடுத்து தங்குகிறேன்.

 பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 28 அணைகளை கட்டியது போதாது என்று, மீண்டும் ஒரு பெரிய அணை கட்ட முயல்கிறது. என்னை எம்.பி. ஆக தேர்ந்தெடுத்தால் நான் அந்த அணைகளை வெடி போட்டு தகர்த்துவிடுவேன்.   பெரிய தலைவர்களின் சிலைகளுக்கு வேலி எதற்கு. சிலையை சேதப்படுத்துவார்கள் என்று தானே அப்படி செய்கிறீர்கள். இந்த அரசாங்கம் வேலைவாய்ப்பை பெருக்கினால் சிலை பக்கம் எவனும் போகமாட்டான்.

  மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து குனிந்து ஓட்டு கேட்கிறார். இவிஎம் மிஷின் எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க. எத்தனை இடத்தில் ஜெயிக்கனும் என்று அதில் செய்து வச்சுட்டாங்க. சும்மா இப்ப நடிக்கிறாங்க.

  என்னை எந்த நாயும் கூட்டணிக்கு அழைக்கவில்லை. அய்யோ... இவரா என்று பயப்படுறாங்க. ஆரணியில் போட்டியிடுவதாகத்தான் முதலில் திட்டம் வைத்திருந்தேன். ஆனால் அங்கு பிரபலமானவர் ஒருத்தர் போட்டியிடப்போகிறார். அதனால் வேலூரில் போட்டியிடுகிறேன்.

  தேர்தல் பிரச்சாரத்துக்கு நடிகர் நடிகைகளை அழைத்து வரமாட்டேன் என்று அவரது பாணியில் சொன்னார்.