எதிர் நீச்சல் பாடலை பாடி மனுதாக்கல் செய்த மன்சூர் அலிகான்!
கு. அசோக்,
எதிர்நீச்சல் என்றபாடலை பாடி மனுதாக்கல் செய்தார் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான்
வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுதாக்கல் துவங்கியது முதல் நாளான இன்று சுயேட்ச்சை மற்றும் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கலானது இன்று துவங்கியது.
முதல் நாளான இன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட குடியாத்தத்தை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் முனியப்பன் என்பவரும் மற்றும் நடிகர் மன்சூர் அலிகானும் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்பு லெட்சுமியிடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பின்னர் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில் எதிர்நீச்சல் என்றபாடலை பாடி மனுதாக்கல் செய்துவிட்டு வந்துள்ளேன்.
இந்திய ஜனநாயக புலிகள் சார்பில் போட்டியிடுகிறேன் நான் சின்னமாக பலா பழம், கிரிக்கெட் பேட் அல்லது லாரி ஆகியவைகளில் எதாவது ஒரு சின்னத்தை கேட்டுள்ளேன் சரக்குந்து என சொல்ல வேண்டாம் சரக்காக மாறிவிட போகிறது. மக்களிடம் போராடி சின்னத்தை கொண்டு செல்ல வேண்டும்.
பலா பழம் கிடைத்தால் வெயிலில் வண்டியை கட்டிகொண்டு தலையில் பலாப்பழத்தை வைத்துகொண்டு அம்மா ஓட்டு போடுங்கம்மா என ஓட்டு பிச்சை எடுப்பேன்.
பிரதமரே வந்து ஓட்டு பிச்சை கேட்கிறார். அவர் 10 ஆண்டு ஆட்சி செய்தவர் நான் எல்லாம் எம்மாத்திரம்.
வேலூரில் நான் போட்டியிட காரணம் சுற்றிலும் மலைகள் உள்ளது அதனை பசுமையாக்கும் நோக்கில் இங்கு போட்டியிடுகிறேன் என்று கிண்டலாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.