பெண் காவலரிடம் குரல் மாற்றி பேசிய நபருக்கு சவுக்கு சங்கர் போலவே குண்டாஸ்!

பெண் காவலரிடம் குரல் மாற்றி பேசிய நபருக்கு சவுக்கு சங்கர் போலவே குண்டாஸ்!

ஜி.சாந்தகுமார்,

  சென்னையில் ஆயுதப்படை காவல் பிரிவில் பணியில் உள்ள பெண் காவலர் ஒருவருக்கு ஒரு பெண் அழைப்பு விடுத்து உடல் அங்கங்களைப் பற்றி பேசியதுடன், ஒரு ஆண் நபரை உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன்.னவர் சொல்படி நடந்து கொண்டால் எஸ்ஐ பணி கிடைக்க அவர் சிபாரிசு செய்வார், புதிய வீடு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி பேசியுள்ளார்.

  பதறிய பெண் காவலர் அழைப்பைத் துண்டித்து, சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

  பெண் காவலரிடம் குரலை மாற்றி பேசி தொடர்பு கொண்டு அத்துமீறலில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பெரியசாமி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் இதேபோன்ற செயலில் ஈடுபட்டதாக திருப்பூர், தருமபுரி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் வழக்குகள் உள்ளது.

இதையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பெண் காவலர்களை தவறாக பேசியதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிற சவுக்கு சங்கர்  குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருப்பது நினைவுகூறத்தக்கதாகும்.