பத்திரிக்கையாளர்கள் ஓய்வுதிய ரூ.12,000/- ஆக உயர்வு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

பத்திரிக்கையாளர்கள் ஓய்வுதிய ரூ.12,000/- ஆக உயர்வு! முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி!

த.நெல்சன், 

 பத்திரிக்கையாளர்கள் ஓய்வுதியத்தை ரூ.12,000/- ஆக உயர்த்தி அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  தமிழ்நாடு ஓய்வுதிய பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் கூட்டம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

  சங்கத்தின் மாநில தலைவர் பி.ஆர்.சுப்பிரமணி தலைமையில் நடந்த அதில் பொருளாளர் டி.எஸ். ஞானகுமார் துணைத்தலைவர் ஜி. கே.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பி.விஜயசேகர் அனைவரையும் வரவேற்றார்.

 கூட்டத்தில் துணைச்செயலாளர்கள் எஸ்.பழனியாப்பிள்ளை, ஏ.சி.புருசோத்தமன் உறுப்பினர்கள் மக்தும் ஜகானி ஆர்.துரைக்கண்ணு சோமசுந்தரம், சக்தியநாதன் கோ.பாண்டியன், புளியங்குடி எம்.சாகுல் அமீது சந்திரசேகர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.10,000/-த்தை ரூ.12,000/- ஆக உயர்த்தி வழங்க சட்டசபையில் அமைச்சர் பெரியசாமிநாதன் அறிவித்தார். ஓய்வூதிய உயர்வுக்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இ க்கூட்டம் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

 பத்திரிகையாளர் நலவாரியத்தில் தமிழ்நாடு ஓய்வூதிய பத்திரிகையாளர்கள் நலச்சங்க உறுப்பினர் ஒருவரை பிரதிநிதியாக நியமிக்க வேண்டி தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

 முதலமைச்சர் மருத்துவக் காப்பிட்டுத்திட்டத்தில் ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு காப்பிட்டுத்திட்ட அட்டை வழங்கவேண்டும்.

 அரசு பேருந்துகளில் ஓய்வுபெற்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் பயணம் செய்வதற்கு இலவச பயண அட்டை வழங்க வேண்டுமாய் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் உறுப்பினர் திருநெல்வேலி நெல்சன் நன்றி கூறினார்.