பாஜக வின் ரோடு ஷோவில் இளைஞர்களை பங்கேற்கவைப்பது தான் ரோடு ஷோவா?

  பாஜக வின் ரோடு ஷோவில் இளைஞர்களை பங்கேற்கவைப்பது தான் ரோடு ஷோவா?

ம.பா.கெஜராஜ்,

 பாஜக வின் ரோடு ஷோவில் இளைஞர்களை பங்கேற்கவைப்பது தான் வேலைவாய்ப்பா என்று அக்கட்சியை சேர்ந்த இளைஞர், பாஜகவை சரமாரியாக விமர்சித்தார்,

இது பற்றின விவரம் வருமாறு,

  டெல்லியின் வடகிழக்கு நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் காண்கிறார். இதனிடையே, இன்றைக்கு மனோஜ் திவாரிக்கு ஆதரவாக பாஜகவினர் பிரம்மாண்டமான ரோடு ஷோ நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள், அங்கிருந்தவர்களிடம் பேட்டி கண்டனர். அப்போது பாஜகவினர் தங்களுக்கு தான் வெற்றி என்றும், தங்கள் வேட்பாளர்தான் ஜெயிப்பார் எனவும் பேட்டி யில் சொன்னார்கள்.  

 அதே கூட்டத்தில் இருந்த பாஜக இளைஞரணியைச் சேர்ந்த நபரிடம் நிருபர் பேட்டி கண்டார்.

இவ்வளவு கூட்டம் வருகிறதே.. மனோஜ் திவாரி வெற்றி பெற்று விடுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்க வேற ப்ரோ. இந்தக் கூட்டம் எல்லாம் ஓட்டுகளாக மாறாது. இவங்களோட (பாஜக) பொய் பிரச்சாரம் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது. நான் இந்த ரோடு ஷோவில் சும்மா தான் கலந்துக்குறேன். எங்க போறாங்களோ அப்படியே போவேன். ஆனால், பாஜகவின் மனோஜ் திவாரிக்கு ஓட்டு போட மாட்டேன். காங்கிரஸின் கன்னையா குமாருக்கு தான் ஓட்டு போடுவேன்.

  பாஜகவோட இந்த ரோடு ஷோ எல்லாம் சும்மா ஷோ ஆஃப்-க்கு தான். கடந்த முறை எல்லாம் பாஜகவுக்கு தான் ஓட்டு போட்டேன். இந்த முறை காங்கிரஸின் கன்னையா குமாருக்கு தான் என்னுடைய ஓட்டு. இந்த ரோடை எல்லாம் பாருங்க. எவ்வளவு மோசமாக இருக்குனு. 10 வருஷமா இந்த ரோட்டை கூட சரி செய்ய முடியல இவங்களால. இந்த தொகுதியில் வளர்ச்சி என்று ஒன்றும் கிடையாது.

 மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. மக்கள் யார் யார்னு பார்த்து தான் ஓட்டு போடுவாங்க. கன்னையா குமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

 இந்த தேசத்தோட பெரிய பிரச்சினையாக வேலைவாய்ப்பின்மை தான் இருக்கு. நான் ஒரு வேலையில்லாத பட்டதாரி இளைஞன். மோடி வேலை தர்றேன்னு சொன்னது இதை தான். இதோ இப்படி அவங்களோட கட்சிக் கூட்டத்தில் கலந்துக்குறது, ரோடு ஷோ போறது.

  இது எல்லாம் தான் வேலைவாய்ப்பு.என்று அந்த இளைஞர் பொறிந்து தள்ளினார்.