கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என சகோதரி பொற்கொடிக்கு உறுதியளித்தேன்! முதல்வர்!

கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என சகோதரி பொற்கொடிக்கு உறுதியளித்தேன்! முதல்வர்!

ம.பா.கெஜராஜ்,

 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யபட்ட நிலையில்,  கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.," என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் சொன்னார்.

 இது குறித்து அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடி அவர்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

  கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.

  இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்! என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.