ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 26 பேர்களுக்கு நற்சான்று வழங்கிய எஸ்.பி.!

ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 26 பேர்களுக்கு நற்சான்று வழங்கிய எஸ்.பி.!

  ம.பா.கெஜராஜ்,

  இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.டி.வி.கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.னிதில் 26 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி.அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

  இக்கூட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை,அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து  மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும்,

மாவட்டத்தில் உள்ள முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில்  நிலுவையில் உள்ள வழக்குகளில்  எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது குறித்தும் கோப்புகள் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர் மற்றும் விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும்அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்.

 இந்த ஆய்வு கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் திரு.சசிக்குமார் (ஆற்காடு நகர வட்ட காவல் நிலையம்), திருமதி.கவிதா (கலவை வட்ட காவல் நிலையம்) உதவி ஆய்வாளர்கள் திரு.பசலைராஜ் (அரக்கோணம் நகர காவல் நிலையம்)திருமதி.தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்), திரு.லோகேஷ் (நெமிலி காவல் நிலையம்), திரு.தினேஷ் (அரக்கோணம் நகர காவல் நிலையம்), திரு.கார்த்திக் (கைரேகை பிரிவு),

சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.சுப்ரமணி (இராணிப்பேட்டை காவல் நிலையம்),  திரு.விஜயன் (ரத்தினகிரி காவல் நிலையம்)திரு.அண்ணாமலை (ரத்தினகிரி காவல் நிலையம்), திரு.லட்சுமணன் (ஆற்காடு நகர காவல் நிலையம்), தலைமைக் காவலர்கள் திரு.பாக்கியராஜ் (ஆற்காடு நகர காவல் நிலையம்)திரு.மாறன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்)திருமதி.முத்துராணி (அயல் பணி ஆற்காடு நகர காவல் நிலையம்), திரு.பிரகாஷ் (ரத்தினகிரி காவல் நிலையம்)திரு.அசேன் பாஷா (வாழைப்பந்தல் காவல் நிலையம்), முதல் நிலை காவலர்கள் திரு.கோபிகிருஷ்ணா (இராணிப்பேட்டை காவல் நிலையம்),

திரு.தனசேகரன் (நெமிலி காவல் நிலையம்)திரு.கண்ணன் (நெமிலி காவல் நிலையம்), திரு.ராஜ்குமார் (இராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம்), திருமதி. சிவரஞ்சனி (கலவை காவல் நிலையம்), காவலர்கள் திரு. சத்திய நாராயணன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்)திருமதி.ஜான்சி ராணி (அரக்கோணம் நகர காவல் நிலையம்)திரு.அமித் பாஷா (அரக்கோணம் நகர காவல் நிலையம்),  திரு.திவாகர் (அரக்கோணம் நகர காவல் நிலையம்),  திரு.விஜயன் (அரக்கோணம் நகர காவல் நிலையம்) ஆகிய 26 காவல் அலுவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

  இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.பிரபு (இராணிப்பேட்டை உட்கோட்டம்) ,திரு. வெங்கடேசன் (அரக்கோணம் உட்கோட்டம்) , செல்வி.சந்திரலேகா (பயிற்சி) ,திரு.வெங்கட கிருஷ்ணன் (CCW), திரு.சுரேஷ் (மாவட்ட ஆயுதப்படை) ,காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்.