பத்தாது இன்னும் வேண்டும்! கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்பாட்டம்!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம், வேலூர் ஓட்டேரியில் உள்ள அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நுழைவாயிலின் முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்பாட்டம் நடந்தது. இதில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு தற்போது மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புபடி உடனடியாக நடைமுறைப்படுத்தி
மாதம் ரூ.,50 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டும்.
அதனை உயர்த்தி வழங்க வேண்டுமென மாநிலம் முழுவதும் சுமார் 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கடந்த மூன்று மாதங்களாக கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கபடாமல் உள்ளது அதனை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு நிலுவை தொகையினை உடனே வழங்கவும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அரசு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டமானது நடந்தது இதில் திரளான கௌரவவிரிவுரையாளர்கள் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.