ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து லண்டன் வழியாக அயோத்தி கொண்டுவரப்பட்ட புனித நீர்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து லண்டன் வழியாக அயோத்தி கொண்டுவரப்பட்ட புனித நீர்!

 உ.சசிகுமார்,

  ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சாரதா பீடம் கோயிலில் இருந்து அயோத்தி ராமர் கோயில் பூஜை, வழிபாட்டுக்காக புனித நீர் கொண்டுவர முடியாத நிலை இருந்தது. அதை முறியடிக்கும் விதமாக ஒரு சமூக ஆர்வலர் செயல்பட்டு புனித நீரை அயோதிக்கு அனுப்பிவைத்திருக்கிறார்

    கடந்த 2019-ம் ஆண்டில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதி தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு இரு நாடுகள் இடையிலான உறவு மோசமடைந்தது. குறிப்பாக இரு நாடுகள் இடையிலான அஞ்சல் சேவை நிறுத்தப்பட்டது. ஆகவே இந்த நிலை இருந்தது.

  இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தன்வீர் அகமது, லண்டன் வழியாக இந்தியாவுக்கு புனித நீரை அனுப்பி வைத்துள்ளார்.

  இன்று ஜன-22 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயிலின் திறப்பு விழாவுக்காக உலகின் 7 கண்டங்களில் இருந்தும் அயோத்திக்கு புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

 எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது சாரதா பீடம்.

  இந்நிலையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சாரதா பீடம் கோயிலில் இருந்து புனித நீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் தன்வீர் அகமது, சாரதா பீடம் கோயிலின் நீர்நிலையில் இருந்து புனித நீரை சேகரித்து லண்டனில் வசிக்கும் அவரது மகள் மக்ரிபிக்கு அனுப்பி வைத்தார்.

   அவர் புனித நீரை பெற்று பிரிட்டனை சேர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூக ஆர்வலர் சோனலிடம் ஒப்படைத்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு சோனல் வந்தபோது, இந்திய பிரதிநிதியிடம் புனித நீரை ஒப்படைத்தார். அதன்பிறகு காஷ்மீர் சாரதா மீட்பு கமிட்டி சார்பில்  நேற்று அயோத்தி கோயில் நிர்வாகத்திடம் புனித நீர்  ஒப்படைக்கப்பட்டது.