விதியை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

விதியை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,

 தமிழகத்தில் விதியை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எந்த கட்சியை சார்ந்தவர்கள் நடத்தினாலும் தப்ப முடியாது, பொன்னை ஆற்றில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி

 வேலூர்மாவட்டம்,  பொன்னை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சென்னைக்கு புதிய பேருந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த இந்த விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு புதிய பேருந்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். ¢ இவ்விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் பொன்னை ஆற்றில் கிராமத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது இவ்வாறு கொட்டப்படுவது சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இவ்வாறு குப்பையை கொட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் பொன்னை பகுதி மக்களின் கோரிக்கையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது  தடுப்பணை கட்டும் பணியும் நடந்து வருகிறது என  பேசினார்.

 பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். காலாவதியான கல்குவாரியை திமுக வினர் நடத்துவதாக, அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தியது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

 அதற்கு அவர் பதிலளிக்கையில், காலாவதியான கல்குவாரியை யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் நடத்தினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். காலாவதியான கல்குவாரியை மூட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 ராமர் ஆலயம் கும்பாபிஷேகத்தில் தமிழகத்தில் ஆலயங்கள் பூஜை நடத்த தடைவிதிப்பதாக மத்திய அமைச்சர் கூறுவது உண்மையில்லை, அமைச்சர் கூறுவது பொய். அது அவருக்கு அழகல்ல.

 பொன்னை தடுப்பணை டெண்டர் முடிந்து பணிகள் துவங்கப்படவுள்ளது.¢பொன்னையை பேரூராட்சியாக மாற்றுவதை இப்போது தான் என் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள் பார்க்கிறேன்.  மேல் அரசம்பட்டு அணைக்காக ஆய்வு செய்ய ரூ.44 லட்சம் அளித்துள்ளோம் பணிகளை துவங்க ஆய்வு செய்து வருகின்றனர் என்று சொன்னார்.