மின் கம்பம் இங்கே...விளக்கு எங்கே!

மின் கம்பம் இங்கே...விளக்கு எங்கே!

 ஜி.கே.சேகரன்,

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காமராஜர் சாலை முதல் வீதியில் தெரு விளக்கு எரியாததால் பொதுமக்கள் அச்சம்

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் காமராஜர் முதல் வீதி உள்ளது. இங்கு சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு கடந்த ஒரு வாரமாக அவை எறியாமல் உள்ளது.

 இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா.

¢ மேலும் பொதுமக்களும் சிறுவர் சிறுமியர்களும் தெருக்களில்  அச்சத்துடன் செல்கின்றனர்.  இருசக்கர வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி வருவதால் மிகவும் அச்சமடைந்துள்ளார்கள்.

  இப்பகுதியில் மின்விளக்குகளை சீர் செய்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.