18 பேர் உயிர் தப்பினர்! அமைச்சர் காந்தி நலம் விசாரித்தார்!

கு.அசோக்,
வாலாஜா அருகே சென்னைக்கு பணியாளர்கள் ஏற்றி சென்ற தனியார் கம்பெனி பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில் 18 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து சம்பவம் அறிந்து அமைச்சர் காந்தி நேரில் சென்று பாதிக்கப்பட்ட உடல்நலம் குறித்து விசாரித்தார்.
சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றி கொண்டு சென்றது.
பேருந்து வாலாஜா சுங்கச்சாவடி அருகே சென்ற போது அந்த வாகனத்துக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 18 பேர் பலத்த காயம் அடைந்து அருகில் இருக்கும் வாலாஜா அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மருத்துவமனை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து மருத்துவர்களிடம் தீவிர சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்..
தொடர்ந்து சம்பவத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.