யானை தந்தம் பிசினஸில் செய்த எம்.பி.யின் ஓட்டுநர்!

டி.இ.முகமது,
ராஜபாளையத்தில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட இரண்டு யானை தந்தங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திமுக தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் இவரது ஓட்டுநர் செல்லையா. மற்றும் முன்னாள் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஆனந்த் அப்பன் இவரது மகன் ராம் அழகு இருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடத்தல் யானை தந்தங்கள் வாங்கி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உளவுத்துறையினர் உள்ளிட்ட காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு சேத்தூருக்கு வெளிப்பகுதியில் அமைந்துள்ள தனியார் ஜவுளிக்கடை அருகே ஒருவர் சந்கேப்படும் விதமாக இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்துள்ளார்.
அவரை பிடித்து சோதனை செய்த போது, தலா 1 அடி உயரமும், 3.5 கிலோ எடையுமுள்ள இரண்டு யானை தந்தங்களை மறைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அவர் கணபதி சுந்தரநாச்சியார் புரத்தை சேர்ந்த முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் அனந்தப்பன் மகன் ராம்அழகு என்பது தெரியவந்தது.
அவர் கொண்டு வந்த தந்தங்களின் மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ராம் அழகை பிடித்த காவல் துறையினர், யானை தந்தங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கைது செய்தவரையும், தந்தங்களையும் காவல் துறையினர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானை தந்தங்களை, திமுக தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் இவரது ஓட்டுனராக தேவதானத்தை சேர்ந்த செல்லையா என்பவரிடம் வாங்கியதாக கூறி உள்ளார். அவரை பிடித்த வனத்துறையினர், மேலும் தந்தங்கள் பதுக்கப் பட்டுள்ளதா ? தந்தங்கள் வாங்கப்பட்ட இடம் ? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.