நெடுஞ்சாலை தடுப்புகளை வெட்டி எடுத்த ஐந்து பேர் கைது!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகளை தூக்கிச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். 25 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு தடுப்பு வேலிகள் பறிமுதல் செய்து ஆம்பூர் கிராமிய போலீசார் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைச்சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு வேலிகளை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டிருந்ததை மலை கிராம் மக்கள் சிலர் பார்த்து அவர்களில் இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மூவர் தப்பிவிட்டனர். நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதுடன், மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை தேடிவந்த நிலையில் ஜமுனாமுத்தூர் மலைப்பகுதியில் பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், வாணியம்பாடி நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் வாணியம்பாடி, பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் பிரபு, ஜமுனாமத்தூர் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த குமரேசன், ஜமுனாமத்தூர் அமிர்தி ரோடு பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ஆம்பூர் துத்திப்பட்டு கன்றாம்பள்ளி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து. அவர்களிடம் இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு தடுப்பு வேலிகளை பறிமுதல் செய்யபட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.