பிரஸ் மீட்டில் உருட்டுக்கடை அல்வா தந்த எடப்பாடி பழனிச்சாமி!
ம.பா.கெஜராஜ்,
உருட்டுக்கடை அல்வா என்கிற பெயரில் பிரஸ் மீட் கொடுத்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கிட்னி முறைகேடு விவகாரத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ வின் மருத்துவமனை என்பதால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா என கேள்வி எழுப்பியினார்.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தொழில்துறை அமைச்சர் ஃபோக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக கூறினார். ஆனால் அந்த நிறுவனம் அதை மறுத்துள்ளது.
இதுதொடர்பான விவாதம் சட்டமன்றத்தில் வந்தபோது தொழில்துறை அமைச்சர், "ஃபாக்ஸ்கானில் பல துணை நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம்தான் தமிழகத்தில் முதலீடு செய்யப்போவதாகச் சொல்கிறார். அப்படியென்றால் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனம் எது என்று சொல்லுங்கள். எல்லாமே வெற்று அறிவிப்பு. அத்தனையும் பொய் அறிவிப்பு.
கிட்னி முறைகேடு இடைத்தளங்களைத் தான் அரசு கைது செய்துள்ளது. ஆனால் இந்த முறைகேடு நடைபெற்ற தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அது திமுக எம்எல்ஏ மருத்துவமனை என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?
இந்த அரசு அமைந்தபிறகு எவ்வளவு தொழில் தொடங்கப்பட்டுள்ளன என்று வெள்ளை அறிக்கை கேட்டால் அமைச்சர் வெள்ளைத் தாளை காட்டுகிறார். அதுதான் உண்மை. வெள்ளைத்தாள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் இந்நாட்டின் நிலை உள்ளது.
முதல்வர் ஜெர்மனிக்குச் செல்லும்போது செய்தியாளர்களிடம், '10 லட்சத்து 62 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ளதாகச் சொன்னார். 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.
அப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எந்த சம்பவமும் தமிழகத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. பெரிய தொழில் வர 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் தமிழக முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனே தொழில் தொடங்கியதாக தவறான கருத்தைத் தெரிவிக்கிறார்.
சுமார் 60 ஆயிரம் கோடிதான் தமிழகத்துக்கு முதலீடு வந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை கொடுத்துள்ளது.
சமீபத்தில் தருமபுரிக்குச் சென்ற முதல்வர் இனி விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்குப் போய் மனு கொடுக்க அவசியம் இல்லை. ஆன்லைன் மூலம் பயிர்க்கடன் வாங்கலாம் என்று அறிவித்தார்.
இதுவரை 4,400 கூட்டுறவு சங்கத்தில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றுவதுதான் இந்த அரசின் வேலைஞ்'' என்றபடி உருட்டுக்கடை அல்வா பாக்கெட் எடுத்துக் காட்டினார்.
அடுத்து பேசிய இபிஎஸ், '''திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க' என்றவர் செய்தியாளர்களுக்கு முதலில் அல்வா கொடுங்கள் என்று மும்முரம் காட்டினார்.

admin
