டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது!

Naresh.N.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய வழக்கில் ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், தெலுங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாஉம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னை அமலாக்கத்துறை எப்படியும் கைது செய்வார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வந்தார்.
விசாரணைக்காக அமலாக்கத்துறை அனுப்பிய 9 சம்மன்களை அவர் பெறவில்லை.
அதேபோல் தன்னை கைது செய்யக்கூடும் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதி மன்றத்தை அணுகி இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
முதலில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் இரண்டு மணி நேரம் விசாரணைக்கு பின் அமலாக்கத்துறையினால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பின்னர் அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடந்தது.
நாளை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
அரசியலில் இது தரம் தாழ்ந்த செயல் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் தேர்தல் தோல்வி பயத்தால் பாஜக அரசு கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது.
பாஜக தலைவர் எவரும் விசாரணையோ கைது நடவடிக்கையோ எதிர்கொள்ளவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் கைது செய்ததுடன் மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடாமல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.