விசிக வுக்கு திமுக 3 சீட்டு கொடுக்கவுள்ளது,! சொந்த தொகுதி சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்! திருமாவளவன் திட்டவட்டம்!

விசிக வுக்கு திமுக 3 சீட்டு கொடுக்கவுள்ளது,! சொந்த தொகுதி சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்! திருமாவளவன் திட்டவட்டம்!

உ.சசிகுமார்,

 விசிக வுக்கு திமுக 3 சீட்டு கொடுக்கவுள்ளது  என தகவல்கள் வெளியாகியிருக்கிற நிலையில்உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்நான் என் சொந்த தொகுதி சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்  "சிதம்பரம் மக்களவை தொகுதி என்னுடைய சொந்த தொகுதி  என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவன் திட்டவட்டமாக சொன்னார்.

 திருமாவளவன் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிடுகையில், திமுக கூட்டணி, மக்களின் நல் ஆதரவை பெற்று வரக்கூடிய தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறும். திமுக கூட்டணியில் 10 கட்சிகளுக்கு மேலாக அங்கம் வகிக்கிறோம். அதில் 2 கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கையெழுத்திட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்..

 அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில், சுமுகமான முறையில் எங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும். நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் ஒரு தொகுதி பொது தொகுதி.

 சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும், பாஜக அதிமுகவை விடுவதாக இல்லை. அதிமுகவை மூன்றாம் நிலைக்குத் தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக உள்ளது. இதனை ஏற்கனவே பலமுறை தெரிவித்து வந்துள்ளேன்.

 சிதம்பரம் மக்களவைத் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் நான் போட்டியிடுவேன். உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

 கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும், ஆந்திராவில் 3 தொகுதிகளிலும் கேரளாவில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர். எனவே தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறோம்.

 தமிழகத்தில் திமுக கூட்டணியிலும், மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் போட்டியிட முயற்சித்து வருகிறோம்" என்றார்.

குறிப்பு:-திமுக விடம் திருமாவளவன் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தனி தொகுதிகளில் மூன்றையும், பெரம்பலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய பொது தொகுதிகளில் ஒன்றையும் கேட்டு லிஸ்ட் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இரண்டு தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க திமுக தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 இரண்டு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம். மூன்றாவது தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட உள்ளது.