தேர்வு எழுத முடியுமா? முடியாதா..! கட்டண பிரச்சனையில் சிக்கிய மாணவர்கள்!

தேர்வு எழுத முடியுமா? முடியாதா..! கட்டண பிரச்சனையில் சிக்கிய மாணவர்கள்!

தேர்வு எழுத முடியுமா? முடியாதா..! கட்டண பிரச்சனையில் சிக்கிய மாணவர்கள்!

கு.அசோக்,
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் ஹால்டிக்கெட் கேட்டு தர்ணா போராட்டம்...  தேர்வு கட்டணம் செலுத்தினால் தான் தேர்வு எழுத முடியும் என பதிவாளர் பேட்டி. 

 வேலூர்மாவட்டம்,சேர்க்காட்டில்  திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சேர்க்காட்டில் புதியதாக கடந்த 2022-2023 ஆம் ஆண்டு புதிய கல்லூரி துவங்கப்பட்டது

 இதில் வேலூர், ராணிப்பேட்டை, பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
 அப்படி இருக்க அவர்களுக்கு தேர்வு நாளை முதல் துவங்கவுள்ளது. 

 ஆனால் எஸ்.சி.எஸ்.டி மாணவர்களுக்கு நிர்வாகம் ஹால் டிக்கெட் தர மறுப்பதாக குற்றம் சாட்டி அம்மா அவர்கள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்  அனைத்து கட்டணங்களும் இலவசம் என்பதால் தான் இந்த கல்லூரியில் சேர்ந்து பயில்கிறோம்.   

 தேர்வுக்கான கட்டணத்தை அரசு செலுத்தும்  என நம்பி இருந்தோம்.

 தேர்வு நாளை துவங்கவுள்ள நிலையில்,  தேர்வு கட்டணத்தை செலுத்தினால் தான் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் சொல்லிவிட்டது.

 எனவே நாளை நாங்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம்.  ஆகவே எங்களுக்கு கட்டணம் இல்லாமல் ஹால் டிக்கெட் அளிக்க வேண்டும் என கருணாவில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மாணவர்கள் கூறினர். 
மேலும்அரசு உடனடியாக தலையிட்டு இதில் தீர்வு   காண வேண்டுமென மாணவர்கள் கூறுகின்றனர் .

 ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு கட்டணம் செலுத்தினால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என உறுதியாக கூறிவிட்டது.
 அரசு எங்களுக்கு இலவசம் என எந்த உத்தரவும் போடவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.
 இதனால் இக்கல்லூரியில் பயிலும் எஸ்.சி.எஸ்.டி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பதிவாளர் செந்தில் வேல்முருகன் கூறுகையில் தேர்வு கட்டணம் எல்லோருமே செலுத்தவேண்டும் யாருக்கும் விதிவிலக்கு அல்ல.

 அரசு என்ன விதிமுறை சொல்கிறதோ அதன் படி நாங்கள் செயல்படுகிறோம்.

 இக்கல்லூரியில் பயில்பவர்களுக்கு டியூஷன் பீஸ் மட்டும் இலவசம் அதனை அரசு வழங்கும் எனவும் தேர்வு கட்டணம் உட்பட பிற கட்டணங்களை  அனைத்து மாணவர்களும் செலுத்த வேண்டும். 

இது குறித்த உத்தரவை நவம்பர் 23ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்பி உள்ளோம் என்று சொன்னார்