அரசியலுக்காக பாஜக நடத்தும் காவிரி போராட்டம்! சட்டபடி அனுகுவோம்! அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

ஜி.கே.சேகரன்,
காவிரி பிரச்சணையில் கர்நாடகாவில் அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றனர் - தமிழக அரசு நியாயப்படி திறந்து விட வேண்டிய தண்ணீர் உரிமையை தான் கேட்கிறது, ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்குகளில் மேகதாது என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் தற்போது தான் மேகதாது என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர் - காட்பாடியில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர்மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே நிழர்குடையும் ஆரிய முத்து மோட்டூரில் பகுதி நேர நியாய விலைகடையை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார் இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ,கூட்டுறவுத்துறை இணை இயக்குநர் குண ஐயப்ப துரை உள்ளிட்டோர் உடன் இருந்தனா.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கர்நாடகா ஏன் டிரிப்யூனல் போகிறார்கள் என எங்களுக்கு தெரியும் நாங்கள் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரை கேட்கிறோம். கிட்டதட்ட 50 டி.எம்.சி பற்றாகுறையாக உள்ளது. தண்ணீர் இல்லாத காலம் எங்களுக்கு இருக்கிறது என கர்நாடக சொன்னால் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்பதை காவிரி மேலாண்மை குழு செய்திருக்க வேண்டும்.
அதனை அவர்கள் செய்யவில்லை அவர்களுக்கு உரிமையில்லாத ஒரு போராட்டத்தில் எங்களை இழுக்க பார்க்கிறார்கள் 17 ஆண்டுகள் நீதிமன்ற வழக்குகளில் ஒரு நாள் கூட மேகதாது வார்த்தையை பயன்படுத்தவில்லை.
உச்சநீதிமன்றத்திலும் அவர்கள் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை இன்றைக்கு மேகதாது என்று சொல்கிறார்கள் கர்நாடகாவுக்கு தண்ணீர் தேவை என்றால் கே ஆர் சாகர் அணையிலிருந்து எடுத்துகொள்ளலாம் மைசூர் மாண்டியாவில் பாஜகவினர் போராட்டம் நடத்துவது அரசியலுக்காக நாங்கள் இதனை சட்டபடி அனுகுவோம் என்று கூறினார்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகன் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்முண்டி பேருந்து நிறுத்த நிழற்குடையை திறந்து வைத்தார். பாரதிநகர் மற்றும் ஆரிமுத்துமோட்டூர் பகுதிகளில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார்.