காரணம் சொல்லாமல் கைது!கொதித்தெழுந்த மலைகிராம மக்கள்!

காரணம் சொல்லாமல் கைது!கொதித்தெழுந்த மலைகிராம மக்கள்!

ஜி.கே.சேகரன்,

 புதூர் நாடு- பெருமாள் கோயிலூர் இருவர் கைது செய்ததை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பஸ் சிறை பிடித்து போராட்டம்- மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

 திருப்பத்தூர் மாவட்டம், புதூர் நாடு  பெருமாள் கோயிலூர் பகுதியை  சேர்ந்த  விவசாயி  ரகுபதி(39)  மற்றொரு நபரான ஜேசிபி டிரைவர் இருவரையும் வனத்துறையினர் கைது செய்து திருப்பத்தூர் அலுவலகத்திற்கு சென்றனர்.    

 அவர்களை எதற்காக கைது செய்தனர் என்பதை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை என்பதால் அவர்கள் கொதித்தெழுந்தனர்.

 பின்னர்  500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கம்புக்குடியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 விசாரிக்கையில், அரசு புறம்போக்கு நிலத்தில் வாழைச்செடி வைப்பதற்காக குழி தோண்டிய போது வனத்துறையினர் கைது செய்ததாக தெரிகிறது.

 அப்படியிருக்க போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில் அடிப்படை வசதிகளான சாலை வசதி தெருவிளக்கு குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லை, எந்த அதிகாரியும் எங்களுடைய கோரிக்கையை செவிசாய்க்கவில்லை  என்று கூறி  இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மேலும், எங்களுக்கு எந்த அரசு சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

   இது ஒருபுறம் இருக்க, கைது செய்யப்பட்ட ரகுபதியின் மனைவி தனலட்சுமி அவருடன் இரு பெண் குழந்தைகள் மூவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 குறிப்பு:- அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  பொதுமக்கள் 10 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.