இந்து கோயில்கள் மீது கட்டப்பட்டுள்ள மசூதிகள் இடிக்கப்படும்! முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பா வன்முறை பேட்டி!

இந்து கோயில்கள் மீது கட்டப்பட்டுள்ள மசூதிகள் இடிக்கப்படும்! முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பா வன்முறை பேட்டி!

 ம.பா.கெஜராஜ், 

 இந்து கோயில்கள் மீது கட்டப்பட்டுள்ள அனைத்து மசூதிகளும் விரைவில் இடிக்கப்படும் என்று கர்நாடகா முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க. வின் மூத்த தலைவருமான கே.எஸ். ஈஸ்வரப்பா பேசியிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, ஆளும் பாஜக வை ஆட்சியில் இருந்து அகற்றியது.

 பாஜக ஆட்சியில் காணப்பட்ட தீவிர இந்துத்துவா நடவடிக்கைகளும், ஊழல் முறைகேடுகளுமே அக்கட்சியின் படுதோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

 அப்படியிருக்க அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான கே.எஸ். ஈஸ்வரப்பா, ஹேவேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

 இந்து மதத்தை வெறுக்கும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. முஸ்லிம்களை தங்களின் தூரத்து உறவினர்களை போல காங்கிரஸ் எண்ணி வருகிறது. முஸ்லிம்களே இல்லை என்றால் காங்கிரஸ் என்றோ அழிந்து போயிருக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ் நிலைத்திருப்பதற்கு இங்குள்ள முஸ்லிம்களே காரணம்.

 முகலாயர்கள் இந்து கோயில்களை இடித்துவிட்டு மசூதிகளை கட்டினார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. மசூதிகளை இடித்துவிட்டு இந்து கோயில்களை கட்டுவதற்கான காலம் வந்துள்ளது. எங்கெல்லாம் இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்தோ, அந்த மசூதிகள் அனைத்தும் இடிக்கப்படும்.

  அங்கு இந்து கோயில்கள் எழுப்பப்படும். அயோத்தில் இப்போது நடைபெறுவதை போல காசி, மதுரா என அனைத்து இடங்களிலும் இது நடைபெறும்.

 நாங்கள் புதிய மசூதிகளை இடிக்கப் போவதில்லை. இந்து கோயில்கள் மீது கட்டப்பட்ட மசூதிகளை தான் இடிக்கப் போகிறோம் என்று கே.எஸ். ஈஸ்வரப்பா சொன்னார்.

 

5.