அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டமோ ஆர்ப்பாட்டம்!

க.பாலகுரு,
திருவாரூரில் அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகையை நிறுத்தாதே, அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையை வழங்கிடு அரசு விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுத் தொகையை மாதம் 5000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்.ஜெ. பாரதசெல்வன் மாவட்ட தலைவர்,
சு.பாலசுப்ரமணியன் தேசியக்குழு, AISF. துரை. அருள்ராஜன் மாவட்ட செயலாளர், க.கோபி மாவட்ட பொருளாளர், AISF, வீ.கனகராஜன் மாவட்ட துணைத் தலைவர், AISF, சே.அருண் மாவட்ட துணைச் செயலாளர், AISF, எஸ். சிவனேஷ் மாவட்ட துணைத் தலைவர் AISF, பா.ஆர்த்தி மாவட்ட துணைத் தலைவர் AISF, ப.ஆகாஷ் மாவட்ட துணைச் செயலாளர் AISF, மு. மணிபாரதி மாவட்ட துணைச் செயலாளர் AISF மற்றும் அகில இந்திய மாணவர் பெருமன்ற இயக்கத்தினர் 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டார்கள்.