ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலி கைது!

ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலி அஞ்சலி கைது!

ம.பாகெஜராஜ்,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த புளியந்தோப்பு அஞ்சலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கடந்த ஐந்தாம் தேதி  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவரது வீட்டருகே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியான புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலையும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருக்கிறார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து அவர் வலைவீசி தேடப்பட்டு வந்தார். 

அஞ்சலை பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அவரை நெருங்க முடியாமல் இருந்தது. 

ஆனால் அஞ்சலியை  பாஜக நேற்று கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. 

அப்படி இருக்க அஞ்சலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அடுத்து யார் கைது செய்யப்பட போகிறார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது