சினிமா பார்க்க வந்தவர்களை தாக்கி அராஜகம்! ஊழியர்களின் அடாவடி! நடவடிக்கை எடுக்காத போலிஸ்!!
ஜி.கே.சேகரன்,
விஜய் சினிமா என்கிற தியேட்டரில் உள்ள கேண்டினில் சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என படம் பார்க்க வந்தவர் கேட்டிருக்கிறார். அதற்காக தியேட்டர் ஊழியர்கள், செக்யூரிட்டி உள்ளிட்ட அடியாட்கள் அந்த இளைஞரை அடித்து இழுத்து வெளியேற்றினர். இந்த ரகளையை பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள விஜய் என்கிற திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது சுமார் 50க்கும் மேற்பட்டோர் படத்தை கண்டு களித்து வந்த நிலையில் படத்தின் இடைவேளையின் போது கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேண்டினில் தின்பண்டங்கள் வாங்க கேண்டீனுக்கு சென்றனர்.
அப்போதுபங்கிருந்த ஊழியர் தூளான சிப்ஸ் பாக்கெட்டை கொடுத்துள்ளார். அது ஏன் தூளாக உள்ளது என கேட்டிருக்கிறார் அந்த இளைஞர். இதனாலங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இளைஞர்களை கண்மூடித்தனமாக அடித்தனர்.
குறிப்பாக அங்கிருந்த செக்யூரிட்டி பாக்சிங் டைப்பில் அந்த இளைஞர்களை தாக்கினார். இதனால் படத்தை காண வந்த பொதுமக்கள் நிம்மதியாக படம் பார்க்க முடியாமல் அச்சமடைந்தனர். பின்னர் தகவல் அறிந்த தியேட்டர் மேலாளர் அந்த இளைஞர்களை வெளியேற்றினார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் பரவிய நிலையிலும் போலிசார் கம்மென்று இருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறாது. இத்தனைக்கும் அந்த வீடியோவில் தியேட்டர் ஊழியர்கள் சினிமா பார்க்க வந்தவர்களை துரத்தி துரத்தி அடிப்பது அராஜகத்தின் உச்சம்.
ஒரு வேளை அந்த தியேட்டர் ஏதாவது முக்கியஸ்தருடையாதா?