ஏன்டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? திமுக பேச்சாளரை விளாசிய ராதிகா சரத்குமார்!

ம.பா.கெஜராஜ்,
ஏன்டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்.,
இப்படித்தான் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை சரத்குமாரின் மனைவியும் விருதுநகர் மக்களவை தொகுதியின் பாஞக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
எதற்காக இப்படி கொதித்தார் ராதிகா என்று பார்த்தால், திமுகவின் பேச்சாளராக உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு மேடையில் பேசும் போது, நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை தேர்தல் சமயத்தில் பாஜகவுடன் இணைத்தார். அப்போது தனது மனைவி ராதிகாவிடம் இது குறித்து கருத்து கேட்டதாகவும், அவரும் சம்மதிக்க கட்சியை இணைத்ததாக கூறியிருந்தார்.
திமுக மேடையில் இந்த சம்பவத்தை மிகவும் ஆபாசமான அர்த்தங்கள் வெளிப்படும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் அந்த பேச்சு சமூகவலைதளங்களிலும் பரவியது.
இதை ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் ரீ போஸ்ட் செய்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.