ராகுல் காந்தி சொன்னால் என்ன? அண்ணாமலை சொன்னால் என்ன? தொகுதி குறைப்பு விஷயத்தில் துரைமுருகன்!

ராகுல் காந்தி சொன்னால் என்ன? அண்ணாமலை சொன்னால் என்ன? தொகுதி குறைப்பு விஷயத்தில் துரைமுருகன்!

ஜி.கே.சேகரன்,

ராகுல் காந்தி சொன்னால் என்ன பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னால் என்ன தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க கூடாது எங்களின் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் - தென் பென்னை பாலாறு இணைப்புக்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் - தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

 வேலூர்மாவட்டம்,காட்பாடி தொகுதிகுட்பட்ட மகிமண்டலம் கிராமத்தில் ரூ.1. 60 கோடி மதிப்பீட்டில்  ¤ ஏரி தூர்வாருதல் மற்றும் குடியாத்தம் மோர்தானா -கேவிக்குப்பம் வழியாக இடது பிரதான கால்வாய் ரூ.2.  50 கோடி மதிப்பீட்டில்  அமைத்தல் ஆகியவைகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

   இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,சட்டமன்ற உறுப்பினர் அமுலு, காட்பாடி ஒன்றிய குழுதலைவர் வேல்முருகன்,மேல்பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்

   பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லை பெரியாறு விஷயத்தில் கேரள அரசு ஒத்துவருவது கிடையாது. அவர்கள் எப்படி நம்மிடம் ஒத்துவருவார்கள்மார்கண்டேய நதி விவகாரத்திலும் அவர்கள் ஒத்துவரவில்லை.

 என்ன செய்வது? நான் மூன்று முறை கடிதம் எழுதிவிட்டேன் மத்திய அமைச்சரிடமும் வலியுறுத்தினேன் தென் பென்னை பாலாறு இணைப்புகாக முயற்சி எடுத்துள்ளேன்.

   பாஜக மும்மொழி கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். அவர்கள்  கொள்கை அவர்கள் கையெழுத்து வாங்குகின்றன.ர் எங்கள் கொள்கை இருமொழி கொள்கை.  ராகுல் காந்தி சொன்னால் என்ன பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னால் என்ன தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைய கூடாது அது தான் எங்களின் கொள்கை. மேல் அரசம்பட்டு அணை ஆய்வுக்கு சென்றுள்ளது விரைவில் கட்டபடும் என கூறினார்

சொந்த செலவில் வளைகாப்பு நடத்திய துரைமுருகன்,

காட்பாடி சமுதாய வளைகாப்பு கர்பினி பெண்களுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது சொந்த செலவில் சீர் வரிசை பொருட்களை வழங்கினார்

  வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறையின் வாயிலாக மட்டுமின்றி, அமைச்சர் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மனைவி சங்கீதா ஆகியோர்களின் சொந்த செலவில் கர்பினி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.

  இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தின் சார்பில் கர்பினி தாய்மார்களுக்கு தின் பண்டங்கள், சத்தான உணவுகள் பிளாஸ்க்,சுவர் கடிகாரம்,எவர் சில்வர் பொருட்கள் மற்றும் குழந்தைக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார் இதில் திரளான கர்பினி தாய்மார்களும் அவர்களின் உறவினர்களும்  பங்கேற்றனர்.