சத்தியமாக இது வேலூர் நகரம் தாங்க!

கு.அசோக்,
வீதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் மக்கள் நடந்துகூட செல்ல முடியாமல் கடும் அவதி வேலூர் மாநகராட்சி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.
வேலூர்மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் பகுதியில் மரப்பட்டரைகளும், நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மழையின் நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மக்கள் சாலையில் நடக்க முடியாத அளவுக்கு மழைநீரானது தேங்கியுள்ளது.இருசக்கர வாகன ஓட்டிகள் பயனிப்பதால் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
மேலும் குப்பைகளும் அள்ளப்படாததால் துர் நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வழியாக செல்லும் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அமைத்து கால்வாய்களை கட்டி தர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் இல்லாமல் துரிதமாக செயல்பட்டு சாலையை அமைத்து கால்வாய்களையும் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
பகுதி வாசிகளே கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்! ஏனென்றால் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் இந்த லட்சணத்தில் தான் உள்ளது. ஆகவே ஒவ்வொன்றாக தான் முடிப்பார்கள். ஒ.கே?