அதிகாரிகளை கடிந்துக் கொண்ட ஆளுங்கட்சியினர்! முதல்வர் நிகழ்வில் பரபரப்பு!

அதிகாரிகளை கடிந்துக் கொண்ட ஆளுங்கட்சியினர்! முதல்வர் நிகழ்வில் பரபரப்பு!

 ஜி.கே.சேகரன்,

 பள்ளிகொண்டா மற்றும் பேர்ணாம்பட்டு பகுதிகளில் உழவர் சந்தையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் - உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஏன் அழைப்பு விடுவிக்கவில்லை என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் - வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

 வேலூர்மாவட்டம், பள்ளிகொண்டாவில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தை மற்றும் பேர்ணாம்பட்டிலும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தா£.¢ பின்னர் பள்ளிகொண்டா உழவர் சந்தையில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் இந்த விழாவில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதே போன்று பேர்ணாம்பட்டு உழவர் சந்தையை முதல்வர் திறந்ததை அடுத்து அங்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார் அப்போது நகரமன்ற தலைவர் திமுகவை சேர்ந்த ஆலியார் ஜுபேர் உள்ளிட்டோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஏன் அழைப்பு விடுவிக்கவில்லை விழாவுக்கு என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர் ஆளுங்கட்சி உறுப்பினர்களே வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 இதனிடையே வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உழவுக்கருவிகள் பவர் டில்லர் உள்ளிட்டவைகளை விவசாயிகளுக்கு வழங்கினார் இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன்,மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.