இளம் பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால் மதுரையில் விபரீதம் ஏற்பட்டிருக்கிறது. இளம்பெண்ணை காதலிப்பதாக வீடியோ காலில் பேசியதுடன் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நபர் போலிசாரிடம் சிக்கினார்.
மதுரை, ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். அப்போது காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பேசியதோடு அருண்குமார் தனது வீட்டிற்கும் இளம் பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அப்போது போனில் பேசி வீடியோ கால் மூலமாக நிர்வாணமாகவும் பேசவைத்து வைத்து அதை வீடியோவாக வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில், அருண்குமாருக்கு சில நாட்களுக்கு முன்பு வேறோரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
இந்த விவகாரம் அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. எனவே தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அருண்குமாரிடம் அந்த பெண் கூறிதற்கு அருண்குமார் மறுத்துள்ளார்.
எனவே அந்த பெண் அருண்குமாரின் தாயாரிடம் இது குறித்து பேசியுள்ளார். அதற்கு அருண்குமார் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் பெண்ணை திட்டி அனுப்பி மிரட்டியுள்ளனர். இருப்பினும் விடாத அந்த பெண் அருண்குமாரிடம் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என கேட்டதற்கு அந்த பெண்ணிண் நிர்வாண வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவேன் என கூறி அருண்குமார் மிரட்டியுள்ளார்.
இது குறித்து அண்ணாநகர் மகளிர் காவல்நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறை ஆய்வாளர் சித்ரா தலைமையிலான மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி இளம்பெண் அளித்த புகாரின் கீழ் இரு பிரிவுகளின் கீழ் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து பின்னர் கைது செய்தனர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.