மது அருந்தியதை தட்டி கேட்ட இளைஞர் தாக்கப்பட்டது ஜாதி பிரச்சணை இல்லை..சமூக பிரச்சனை முன்னாள் நீதியரசர் கருத்து!

மது அருந்தியதை தட்டி கேட்ட இளைஞர் தாக்கப்பட்டது ஜாதி பிரச்சணை இல்லை..சமூக பிரச்சனை முன்னாள் நீதியரசர் கருத்து!

 ஜி.கே.சேகரன்,

 மனித உரிமையை பின்பற்றாதவர் யாரும் உண்மையில் மனிதன் இல்லை நடுரோட்டில் மது அருந்தியதை தட்டி கேட்ட இளைஞர் சரமாரியாக தாக்கப்பட்டது என்பது ஜாதி பிரச்சணை இல்லை அது ஒரு சமூக பிரச்சணை இது போன்ற காட்டுமிராண்டி தனத்தை ஒரு போதும் ஏற்க முடியாது - வேலூர்  ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையர் நீதியரசர் தமிழ்வாணண் பேச்சு

  வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று   தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தலைவர் முன்னாள் நீதிபதி, நீதியரசர் முனைவர்  தமிழ்வாணன்  மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி   ஆகியோர்களின்  தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கள ஆய்வு  கூட்டத்தில்  முன்னாள் நீதிபதி நீதியரசர் முனைவர் தமிழ்வாணன் பேசுகையில் சாலையில் சிலர் மது அருந்துகின்றனர் அதனை அவ்வழியாக சென்ற இளைஞர் ஒருவர் தட்டிகேட்டு ஏன் இங்கு சாலையில் மது குடிக்கிறீர்கள் என கேட்ட அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர் இது   ஜாதி பிரச்சணை இல்லை இது சமூக பிரச்சணை.

   இந்த காட்டுமிராண்டி தனத்தை ஒரு போதும் ஏற்க முடியாது, இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஏற்பட்ட கொடுமை மக்களின் மன நிலை எந்த அளவுக்கு கீழாக உள்ளது.

  மேலும் வன் கொடுமை சட்டங்களிலும் வழக்கு கொடுத்துவிடுகின்றனர் நாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றெல்லாம் சொல்கிறோம் .ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது இதனை எல்லாம் தடுக்க இக்கருத்துக்களை ஆசிரியர்கள் இடத்தில் கொண்டு சென்றால் அது பல மாணவர்களுக்கு போய் சேரும் மனித உரிமையை பின் பற்றாத மனிதன் எவரும் உண்மையில் மனிதன் இல்லை என பேசினார்.