தேர்தல் ஆணையர் திடீரென ராஜினாமா.... தயாநிதி மாறனுக்கு டவுட்டு!

தேர்தல் ஆணையர் திடீரென ராஜினாமா.... தயாநிதி மாறனுக்கு டவுட்டு!

  ஜி.சாந்தகுமார்,

  இந்திய தேர்தல் ஆணையர் அருண் ஜோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளது பலருக்கு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

  அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா ஆகியோர் முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் கால்பந்து விளையாட்டு போட்டியை துவக்கிவைத்தனர்.

அப்போது தயாநிதிமாறன் பேசுகையில், ஒரே ஒருவர் இல்லையென்றால் தலைமை தேர்தல் ஆணையர் சர்வாதிகாரமாக செயல்படுவார். அவரை தட்டிகேட்க முடியாது. இது மோடி, அமித்ஷாவின் சூழ்ச்சியாகும். ஏற்கனவே இவிஎம் இயந்திரத்தின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையமே சரியில்லாத காரணத்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

  40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம். ஆனால் அதனை ஏமாற்றும் வகையில் பாஜக இறங்கிவிட்டது.இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.