பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட காங்கிரஸ் கட்சியினர்! கர்நாடக சட்டபேரவையில் பாஜக அமளி!

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட காங்கிரஸ் கட்சியினர்! கர்நாடக சட்டபேரவையில் பாஜக அமளி!

உ.சசிகுமார்,

   பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழங்கிய காங்கிரஸ் கட்சியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ! கர்நாடக சட்டபேரவையில் பாஜக எம் .எல் .ஏ.க்கள் அமளி செய்தனர். இதனால் இன்று காலை அவையில் பிரச்சனை ஏற்பட்டது.

 கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜ.க மற்றும் மதசார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

 அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டினர்.

மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் அளித்தனர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.

 இந்நிலையில் இன்று காலை கர்நாடகா சட்மன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா உள்ளிட்ட பா.ஜ.க.எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

 இது தொடர்பான விவாதத்தில் பேசிய பி.கே.ஹரிபிரசாத், "பா.ஜ.க.வை பொறுத்தவரை பாகிஸ்தான் எதிர் நாடாக இருக்கலாம், ஆனால் எங்களை பொறுத்தவரை  பாகிஸ்தான் அண்டை நாடுதான். லாகூரில் உள்ள ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறிய எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னம் விருதை பாஜக கொடுத்துள்ளதே. அப்போது பாகிஸ்தான் எதிரி நாடாக இல்லையா? என அவர் கேள்வியெழுப்பினார்.

 இந்தியாவுக்கு எதிராக நான்கு முறை போர் நடத்திய பாகிஸ்தானை "எதிரி தேசம்" என்று காங்கிரஸ் கட்சி கூறவில்லை. ஆகையால் "தேச விரோதமாக காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டுள்ளது என்று பாஜக விமர்சித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில் "நாங்கள் குரலை ஆடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம் அறிக்கை வரும்போது, சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது உண்மையாக இருந்தால், அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தெரித்திருக்கிறார்.