திடீரென வேலூர் வந்த முதலமைச்சர்!

திடீரென வேலூர் வந்த முதலமைச்சர்!

 கு.அசோக்,

தேசிய நுகர்வோர் ஆணைய நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.

  வேலூர் மாவட்டம், வேலூருக்கு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் திடீரென வருகை தந்தார். ஜி.ஆர்.டி,என்கிற தனியார் விடுதியில், தேசிய நுகர்வோர் ஆணையம் சார்பில் நலத்திட்டங்களை வழங்கும் விழாவானது நடந்தது.

   சரவணகுமார் மற்றும் பரத் ஆகியோர்களின் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக புதுவை முதல்வர் ரங்கசாமி பங்கேற்று நலத்திட்டங்கள் பலவற்றை வழங்கினார்.

அவருக்கு தேசிய நுகர்வோர் ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இது போன்று அனைவருக்கும் நல்ல உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டுமென கேட்டு கொண்ட பாண்டிசேரி முதல்வர் ரங்கசாமி தேர்தல் குறித்தோ கூட்டணி குறித்தோ ஒன்றும் கூறாமல்பேட்டியை தவிர்த்துவிட்டு சென்றார்.