டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் வெட்டி கொலை! பரபரப்பில் சாத்தூர்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
  சாத்தூரில் முன் பகை காரணமாக நேற்று (செவ்வாய்கிழமை) பட்டபகலில் டாஸ்மாக் கடை முன்பு பார் ஊழியர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பத்தே நிமிடத்தில் கொலையாளிகளை சாத்தூர் நகர் போலீசா£ வளைத்து பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் காந்தி ராஜன் (33). இவருக்கு  திருமணம் முடிந்து மனைவி மற்றும்  இரண்டு குழந்தைகள் உள்ளனர். காந்தி ராஜன், சாத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அரசு மதுபானக் கடையில் உள்ள தனியார் பாரில் ஊழியராக கடந்த ஒரு ஆண்டாக பணிபுரிந்து வருகிறார்.
 இந்த நிலையில் காந்தி ராஜன் வழக்கம் போல் இன்று மதுபான பாரில் வேலை செய்து கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென காந்தி ராஜனை அரிவாளால் வெட்டி உள்ளனர்.
 இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள் சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 
சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காந்தி ராஜனை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காந்தி ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


   அரசு மதுபானக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பார் ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
   முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடை பெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில் கோவில்பட்டி செல்லும் வழியில் தோட்டிலோவன்பட்டியில் உள்ள போலீஸ் செக்போஸ்ட்டில் காந்தி ராஜனை அரிவாலால் வெட்டியதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 
    நத்தத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  கிருஷ்ண பிரபு (27) மற்றும்
மகாலிங்க சுந்தரமூர்த்தி (23) ஆகியயோர் என்பதும்,  காந்தி ராஜனை முன் பகை காரணமாக வெட்டி கொலை செய்ததாக  முதல் கட்ட  விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
   சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் சோமசுந்தரம் மற்றும் சூரிய மூர்த்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனா.பட்டப்பகலில் பொது மக்கள் அதிகம் கூடும்  பேருந்து நிலையம் அருகில் இந்த கொலை சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
குறிப்பு. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து காந்திராஜனின் உறவினர்கள் மறியலில் ஈடுபளட்டனர். 
  மேலும் அவரது உடலை  வாங்க மறுத்துவருகிறார்கள். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில்  கொலை செய்யப்பட்டவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூபாய் 10 லட்சம் நிதி உதவி மற்றும் அரசு வீடு ஆகியவற்றை வழங்கும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
  ஆகவே அங்கு பதற்றம் நீடிக்கிறது.