மோப்ப நாய் “சாரா” வேலூர் எஸ்.பி.யிடம் ஒப்படைப்பு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்டத்தில் மோப்பநாய் பிரிவிற்கு சாரா என்ற பெண் மோப்ப நாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மேற்படி மோப்பநாய் சாரா குற்றங்களை கண்டறிவதற்காக ஏற்கனவே வேலூரில் ஆறு மாத அடிப்படை பயிற்சி முடித்துள்ளது.
பின்னர் சென்னை செயின்ட் தாமஸ் மோப்பநாய் பிரிவு தலைமையகத்தில் ஆறு மாதங்கள் நவீன பயிற்சி எடுத்த பின்னர், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.என். மணிவண்ணன் இ.கா.ப., அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது அதன் பயிற்சியாளர்கள் மோப்ப நாய் சாராவுடன் எஸ்.பி.அவர்களிடம் அறிக்கை செய்தனர்.
மேற்படி சாரா வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஈடுபடுத்தப்பட உள்ளது.
அதே போல், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் விற்பவர் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் தேதி பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் திரு. முத்துக்குமார் தலைமையிலான போலீசார் அரவட்லா மலை மேல் சோதனை செய்து கொண்டிருந்த பொழுது முரளி த/பெ ஆறுமுகம் என்பவர் சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராய பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தார்.
அதனை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.