சேர் போட்டு அமரவைத்து பெட்ஷீட்டால் மூடப்பட்ட உடல்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கோவை வடவள்ளி அருகே பெயிண்டிங் வேலைக்கு சென்ற நபர் தொங்கு சாரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
அவர் கீழே விழுந்தவுடன் முதலுதவி செய்ய அபார்ட்மென்ட் உரிமையாளர் முன்வரவில்லை. ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்ல முன்வரவில்லை.
குடும்பத்திற்காக உழைக்கச் சென்ற நபர் கீழே விழுந்து உயிரிழந்த போது அப்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லையாம்.
பெயிண்டரின் உடலை சேர் போட்டு அமர வைத்து பெட்ஷீட் போர்த்தி வைத்திருந்தனர்.
இதை பார்த்தோர் அந்த அபார்ட்மென்ட்காரர்களை வசைபாடினார்கள்.
ஏழை மனித உயிர்களுக்கு இது தான் நிலமையா?