ரூ.30 கோடி புதிய டைட்டில் பார்க் பணிகள்! எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆய்வு!

ஜி.கே.சேகரன்,
30 கோடி புதிய டைட்டில் பார்க் அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் ஆய்வு நெடுஞ்சாலைகளிலும் மரக்கன்றுகளை நட்டார்.
வேலூர்மாவட்டம், அப்துல்லாபுரத்தில், ரூ.30 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்க முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது,
இதனை அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாபு ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கட்டுமான பணிகளை தரமாக கட்டி தர ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார்.
இதன் பின்னர் நரசிங்கபுரம் என்ற இடத்தில் நெடுஞ்சாலைத்துறையின் இடத்தில் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பணிகளை துவங்கி வைத்தார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரூ,.30 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்கபடுகிறது இதன் மூலம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இரண்டாம் கட்ட டைட்டில் பார்க் பணிகளும் துவங்கும் என்று கூறினார்.