சீறீப்பாய்ந்த காளைகள்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் 200 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீரிபாய்ந்து ஓடியது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த எருது விடும் விழாவை வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார் முன்னதாக காவல் துறையினர் முன்னிலையில் வருவாய் துறையினர் கிராம மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அரசு விதிமுறைகளை பின்பற்றி காளைகளுக்கும் எந்த துன்புறுத்தலும் இல்லாமல், மனித உயிர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விழாவை நடத்துவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த எருது விடும் விழாவில் திருப்பத்தூர் வேலூர் இராணிப்பேட்டை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மாநிலம் குப்பம், வெலதிகாமணி பெண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 200 குக்கும் மேற்பட்ட காளைகள். பங்கேற்றது.
இந்த காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பின்னர் அவிழ்த்து விடப்பட்டு காளைகள் சீரி பாய்ந்து ஓடியது.
இதில் குறைவான வினாடிகளின் இலக்கை சென்றடையும் காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம்,இரண்டாவது பரிசாக ரூ.80 ஆயிரம் ,மூன்றாம் பரிசாக ரூ .60 ஆயிரம் என 37 பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க வாணியம்பாடி டி.எஸ்.பி விஜயகுமார்¢ தலைமையில் கிராமிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.